Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

உழவு இயந்திரம் தலைகீழாக வீழ்ந்ததில் சாரதி ஒருவர் பலி

 

(ஆயித்தியமலை நிருபர்)

மட்டக்களப்பு ஆயித்தியமலை வயல் பகுதியில் உழவு இயந்திரம் தலைகீழாக வீழ்ந்ததில் அதனை செலுத்திய சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை 11.03.2023 பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிசார் தெரிவித்தனர்.

ஆயித்தியமலை நெல்லூரைச் சேர்ந்த 34 வயதுடைய தர்மதாசா சதீஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த வயலில் நேற்று பிற்பகல் உழவு இயந்திரத்தால் உழும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வயலில் உழவு இயந்திரத்தின் பின்பக்க டயர்கள் புதைந்ததையடுத்து உழவு இயந்திர முன்பகுதி மேல் எழுந்து தலைகீழாக வீழ்ந்ததையடுத்து சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.




இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.


No comments