Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள் - மக்களுக்கு அறிவுறுத்தல்


இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் நாளாந்த நீர் பாவனை சுமார் 10% அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மக்கள் முடிந்தவரை தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அதன் துணைப் பொது கண்காணிப்பாளர் என். யு. கே. ரணதுங்க தெரிவித்துள்ளார். தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் நிலைமையை நிர்வகித்து வருவதாகவும் அவர் கூறினார்.

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் நீண்டகாலத்திற்கு பிரச்சினையின்றி நீரினை வழங்க முடியும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதி பொது அத்தியட்சகர் மேலும் சுட்டிக்காட்டினார்.(DC)



No comments