இந்த ஆண்டு Zim Afro T10 லீக்கின் ஆரம்ப பதிப்பில் ஐந்து இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இடம்பெறவுள்ளனர்.
திங்களன்று நடைபெறும் வரைவுக்குப் பிறகு அணிகள் உறுதி செய்யப்பட்டன. ஒவ்வொரு அணியும் குறைந்தது ஆறு சிம்பாப்பே வீரர்கள் உட்பட குறைந்தபட்சம் 16 வீரர்களைத் தேர்ந்தெடுத்தது.
இந்தப் போட்டியில் ஹராரே ஹரிகேன்ஸ், ஜோபர்க் பஃபேலோஸ், டர்பன் கலாண்டர்ஸ், புலவாயோ பிரேவ்ஸ் மற்றும் கேப் டவுன் சாம்ப் ஆர்மி ஆகிய ஐந்து அணிகள் பங்கேற்கின்றன.
ஜூலை 20 முதல் ஜூலை 29 வரை ஹராரேயில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளன.
இதில் இலங்கை சார்பாக
மகேஷ் தீக்ஷனா - சாம்ப் ஆர்மி
பானுகா ராஜபக்ச - சாம்ப் ஆர்மி
கெவின் கொத்திகொட – ஹராரே ஹரிகேன்ஸ்
திசர பெரேரா – புலவாயோ பிரேவ்ஸ்
சாமிக்க கருணாரத்ன – சாம்ப் ஆர்மி
ஆகியோரில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (NW)
No comments