Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

கல்வித்துறைக்கு 6 சதவீத நிதி ஒதுக்கப்பட வேண்டும் - ஸ்டாலின் தெரிவிப்பு

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதோடு,  குழந்தைகளுக்கான அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைகளை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்தக்கூடும் என  கல்வி அமைச்சர் நேற்று கூறியது முற்றிலும் தவறானது என இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) தெரிவித்துள்ளது.


ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், கல்விக்கான வரவு செலவு திட்டம் இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், பாடசாலை செலவுகளை பெற்றோர்கள் ஏற்க வேண்டியுள்ளது, அத்தோடு  பல்வேறு தேவைகளுக்காக தினமும் பாடசாலைக்கு பணம் அனுப்ப வேண்டியுள்ளது எனவும் தெரிவித்தார்.


எனவே, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து கல்வித்துறைக்கு 6 சதவீத நிதியை அரசு ஒதுக்க வேண்டும், எனினும் அது ஒதுக்கீடு செய்யப்படவில்லை என ஸ்டாலின் தெரிவித்தார்.


அண்மைய வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் மூலம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு எவ்வித தீர்வும் வழங்கப்படாவிட்டாலும், அவர்கள் மீது பாரிய சுமை சுமத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் வழங்குவது வழமை போன்று ஒவ்வொரு வருடமும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளுக்கான தீர்வுகள் இதுவரை வழங்கப்படவில்லை.


எனவே அரசிடமிருந்து சுமார் 46 பில்லியன் ரூபாய்களை ஒதுக்குமாறு திரு ஸ்தாலீன் கல்வியமைச்சைக் கேட்டுள்ளார்.


"தற்போதைய பட்ஜெட் முன்மொழிவுகள் மூலம், கல்வித் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எதுவும் இல்லை. பாடசாலை  மாணவர்களுக்கு காலணிகள், பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்குவதைக் கல்வி அமைச்சர் எப்போதும் குறிப்பிடுகிறார். இந்த நடைமுறை எப்போதும் இருக்கிறது. அவர் செய்து வருகிறார். இந்த வசதிகளை வழங்குவதைத் தவிர வேறு எதுவும் மாணவர்களுக்கு இல்லை," என்றார் ஸ்டாலின் 


பட்ஜெட் ஒதுக்கீட்டில் பாடசாலை  சீருடைகளுக்கு 6,000 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் அனைத்தும்  சீன அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது எனின் 6 ஆயிரம் கோடி ரூபாவின் நிலை என்ன எனவும் கேள்வி எழுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது. (DM)



No comments