Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

புத்தகப் பையின் சுமையைக் குறைத்து அழுத்தங்களற்ற கல்விச்சூழலை உருவாக்குவோம் - பிரதமர்




ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு வளமான நாட்டிற்குள் வளமான கல்வியை வழங்குவதற்கான பாரிய பொறுப்பை ஓர் அரசாங்கம் என்ற வகையில் நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம்.

 பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் பாடசாலைக்குச் செல்வதைக் காணும் வகையில், புத்தகப் பையின் சுமையைக் குறைத்து, அழுத்தங்களற்ற கற்றல் சூழலை உருவாக்குவது புதிய கல்வி மறுசீரமைப்பின் ஒரு விசேட அம்சமாகும். மனதிற்கு இனிய பாடசாலைச் சூழலை உருவாக்குவதற்கான 'கனவுப் பாடசாலை' (Dream School) திட்டத்தை யதார்த்தமாக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.



இன்று முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்பட்ட உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை வெற்றிகரமாக்கும் பொறுப்பை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம்.


ஜனவரி 29ஆம் திகதி அத்துருகிரிய குணசேகர ஆரம்ப வித்தியாலயத்தில் நடைபெற்ற, புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தேசிய விழாவில் உரையாற்றும் போது கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார். (News.lk)




No comments