-மாத்தளை அஸீம்-
மாத்தளை, மந்தண்டாவலை மினா தக்கியாவின் பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. தொழுகை காலை 07.00 மனிக்கு ஆரம்பமானது. தொழுகையைத் தொடந்து மினா தக்கியாவின் இமாம் ஹுசைன் அவர்களால் உறை நிகழ்த்தப்பட்டது.
நோன்புகாலம் முழுதும் நிகழ்த்தப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
பெருநாள் தொழுகையில் கலந்துகொண்ட பிரதேச மக்களுக்கு காலை உணவும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை நிர்வாக ஒத்துழைப்புடன் ஊர் வாலிபர் சங்கம் மிகச் சிறப்பாக செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbkj3c_F6ZD6s19Gs777jgWzyvd8esEqGRfvt03OwEnNmuT9WmIuf2rzXdmH-xmsTYTCP8z50SUK3fKkI0BsJtbx3IfOkvaNzQ8qhLAYzGsjf5RsebBuyJcF_RJ7Lmd9U3iZ3cYWg7EMTG-F2MgEtQKlfcjkA30BcwwRHYLoxKpj5_OTEyOr1QCYzdw14/s16000/IMG-20260321-WA0054.jpg)






No comments