Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

எரிபொருளுக்காய் QR Code பெற்றாலும் இந்த கட்டுப்பாடும் நடைமுறைக்கு வருகிறது



தேசிய எரிபொருள் அனுமதி முறையின் கீழ் எரிபொருள் வழங்கும் போது QR குறியீடு வழங்கப்பட்டாலும், எந்த காரணத்திற்காகவும் எரிபொருள் கேன்கள் அல்லது போத்தல்கள் போன்ற வெளிப்புற கொள்கலன்களில் வழங்கப்படாது என்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


அதற்கமைய, அந்த QR குறியீட்டை பதிவு செய்த வாகனத்திற்கு மட்டுமே எரிபொருளைப் பெற முடியும் எனஅவர் கூறியுள்ளார்.



மேலும், புதிதாக வாங்கப்பட்ட வாகனங்கள் மற்றும் உரிமை மாறிய வாகனங்களுக்கு QR குறியீடுகளைப் பெறுவதில் நுகர்வோர் பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.


இது தொடர்பாக அரசாங்கம் தலையிட்டு விரைவான தீர்வை வழங்கும் என்று தான் நம்புவதாகவும் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும், பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் அலுவலக சேவைகளை வழக்கம் போல் பராமரிக்க, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் தனியார் விநியோகஸ்தர்களிடம் எரிபொருள் இருப்புக்களை வழங்குமாறு சங்கம் கேட்டுக்கொள்கிறது.



இந்த முறையை செயல்படுத்தும் போது எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளின் போது சில தொழில்நுட்ப பிழைகள் ஏற்பட்டதாகவும், அவற்றைத் தீர்த்த பிறகு செயல்முறை முன்னோக்கி எடுத்துச் செல்லப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். (Lankasri)





No comments