Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

அதிகரிக்கும் டெங்கு - 79000 நோயாளர்கள் வரை அடையாளம்





நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 79,000 ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 


அதற்கமைய ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 79,016 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 


அத்துடன் 57 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு நேற்று (22) இரவு விடுத்துள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  



அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  


கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஆண்டின் இதுவரையில் 16,676 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.  


அதற்கு அடுத்ததாக கொழும்பு மாவட்டத்தில் 15,748 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.  



இதுதவிர ஏனைய மாவட்டங்களான மாத்தறையில் 5495 பேரும், கண்டியில் 5318 பேரும், களுத்துறையில் 5190 பேரும் இரத்தினபுரியில் 4444 பேரும், காலியில் 4391 பேரும் டெங்கு நோயினால் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர்.  


2026 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தின் முதல் 22 நாட்களில் மாத்திரம் 23,641 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது. (AdaDerana)




No comments