வியாழக்கிழமை அதிகாலை உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கருங்கடல் துறைமுக நகரமான ஒடேசா உள்ளிட்ட பல பகுதிகளில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 18 பேர் காயமடைந்ததுடன், பல கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தகவல் Telegram செயலி மூலம் அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.
கீவ் நகர மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவிக்கையில், நகரில் காயமடைந்த 12 பேரில் இரண்டு குழந்தைகளும் அடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் மக்கள் வசிக்கும் கட்டிடங்களுக்கு மேலதிகமாக, தாக்குதலின் போது ஏற்பட்ட சிதைவுப் பொருட்கள் கிடங்கு வளாகங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் அருகிலும் விழுந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் உள்ளிட்ட இத்தகைய இடங்கள் தற்போது ரஷ்ய தாக்குதல்களின் அடிக்கடி இலக்குகளாக மாறியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioBV86E8be31HGft6ndmNirNCLyOQ2qe0r323FnMyh5x9SGrCdvysTWPeAP12kf06x2nzKIihYVFsb0EL7wJwKNmP5nth35oLRBclw9rTYCe65uSVHLBOS9XljOuzzG8f3aR5WghKlsHHHE1YSrxS_Bu1qa0A4k78UAjwCmP2hwIDfqxJvR85kiwgrHNE/s1600/4.jpg)





No comments