Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

எரிபொருள் விற்பனை அதிகரிப்பு

கடந்த வாரத்தில் தேசிய எரிபொருளின் விற்பனை மற்றும் QR குறியீடு மூலம் எரிபொருளை வழங்குவதில் குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தைக் காட்டுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் 60% க்கும் குறைவாக இருந்த விற்பனை தற்போது 80% க்கு மேல் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.




தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர QR வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத 66 எரிபொருள் நிலையங்களை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதையடுத்து, இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.


பண்டிகை கால எரிபொருள் தேவைக்கு ஏற்ப, அடுத்த சில நாட்களுக்கு நாளாந்த எரிபொருள் விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, 4,650 மெற்றிக் தொன் 92 ரக பெற்றோல் மற்றும் 5,500 மெற்றிக் தொன் ஆட்டோ டீசல் நாளாந்தம் வழங்கப்பட்டு விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்


No comments