அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் சிக்கன வாகனம் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பதவிக்காலம் முடியும் வரை அந்த வாகனத்தை பயன்படுத்தி மக்கள் சேவையை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனங்கள் வழங்கப்படாது எனவும் தெரிவித்திருந்தார்.
மக்களின் வரிப்பணம் விரயமாவதை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். (DC)


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYerH14q9aZo2sLaB97RmAW4MHM38I-8gpY1HTQ9IUWLb1xSAYj3Jn7qMeS47Rh-0FwmzpjPhul-V_OpJl-6LPhH1iPF5875ZZIOFMNA2RP606e0RcGVOfgzkHcREombn51aKHZZwDq1EgbfLbHhTkYFo6O3ygaesRvupVIDbeU04UVsdJUp_SMtGsXpc/s16000/OIP%20(63).jpeg)
.jpeg)
.jpeg)


No comments