2025 ஆம் ஆண்டின் கடந்த சில நாட்களில், 119 இலங்கையர்கள் இஸ்ரேலில் வீட்டு செவிலியர் வேலைகளுக்காகச் சென்றுள்ளனர்.
இதற்கிடையில், ஜனவரி 29 ஆம் திகதி இஸ்ரேலுக்குப் புறப்படவுள்ள 152வது குழுவைச் சேர்ந்த 34 செவிலியர் நிபுணர்களுக்கான விமான டிக்கெட்டுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (27) பணியகத்தில் நடைபெற்றது, இதில் 29 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் அடங்குவர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் இஸ்ரேலிய செவிலியர் நிறுவனத்திற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இலங்கையர்கள் 2009 பேர் செவிலியர் துறையில் பணிபுரிய இஸ்ரேலுக்குச் சென்றுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலில் செவிலியர் துறையில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
எனவே, இஸ்ரேலில் செவிலியர் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்காக எந்தவொரு நபருக்கும் பணம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.(adaderana )


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgww0m5Loz39Sc_4CymEobXZMrKjJMus2ews8yjxAA7EwcerHTVc9GZzC38k_N3rSiQNZtLNJ0mgK0nCy4NyZDyHQmzvit3lnGjwHV7pk88DQ52EsMJzSv12Em0_l9lM1GOnjemQXXaFQEQ0CKOQ9ZehWCLO3n7V1b81wP3hZsBJj0fRMUltqwSPErCNWA/s16000/1000051404.jpg)



No comments