சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட வோர்ன்-முரளி டெஸ்ட் தொடர் நாளை (29) காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது.
போட்டியின் சாம்பியன்களுக்கு வழங்கப்படும் வோர்ன் - முரளி கிண்ணம், இன்று (28) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு இரு அணிகளின் தலைவர்களால் மிகவும் வண்ணமயமான உள்ளூர் பாரம்பரிய நடனங்களுக்கு மத்தியில் கொண்டு வரப்பட்டது.
இந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற சக்திவாய்ந்த அவுஸ்திரேலிய அணியின் தலைவரான பெட் கம்மின்ஸ், தனிப்பட்ட காரணங்களால் போட்டிகளில் பங்கேற்க மாட்டார், மேலும் அணியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்துவார்.
இதற்கிடையில், இலங்கை அணியின் தொடக்க வீரர் பெத்தும் நிஸ்ஸங்க காயம் காரணமாக நாளை ஆரம்பமாகும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார்.
அவருக்கு பதிலாக, இலங்கை அணியின் தொடக்க வீரராக ஓஷத பெர்னாண்டோ களமிறங்கவுள்ளார்.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை காலை 10 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. (adaderana )
No comments