வட மாகாண சுற்றுலாத்துறையின் அனுசரணையில் வவுனியாப் பல்கலைக்கழகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தின் நெறிப்படுத்தலில் இந்த கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலகத்தில் 22.10.2025 நடைபெற்றது.
மன்னார் மாவட்டத்திற்கான இக்கலந்துரையாடலில் வியாபாரக்கற்கைகள் பீட பீடாதிபதி பேராசிரியர் யோ. நந்தகோபன் தலைமையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர், மேலதீக மாவட்ட செயலாளர் நிர்வாகம், வடமாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர், வன வள அதிகாரிகள், வனஜீவராசிகள் அதிகாரிகள், பொறியியலாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான அனுபவம் சார்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் சிரேஸ்ர விரிவுரையாளர்களான
திருமதி மதிவதனி, திரு சிவநேந்திரா திரு மதூசன் மற்றும் றுகுணு பல்கலைக்கழக கலாநிதி சம்பிக லியணகே கலந்துகொண்டனர்.
சி.சிவநேந்திரா வவுனியாப்பல்கலைக்கழக சிரேஸ்ர விரிவுரையாளர் இந்த கலந்துரையாடலுக்கான இணைப்பாளராக செயற்பட்டார்.
No comments